Tamilnadu
8 நாட்களாக போக்குக் காட்டிய T23 புலி; போஸ்பராவில் தென்பட்டது எப்படி? அங்கு சென்றது ஏன்?
மசினகுடி, சிங்காரா வனப் பகுதியில் கடந்த 17 நாட்களாக தேடப்பட்டு வந்த T23 புலி தனது வாழ்விடமான போஸ்பர வனப்பகுதியில் முகமிட்டுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து T23 புலி போஸ்பர பகுதியில் நடமாடி வருதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த T23 புலி தற்போது தனது வாழ்விடமான போஸ்பரா வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் தானியங்கி கேமரா பதிவை வைத்து உறுதி செய்தனர்.
கடந்த பதினேழு நாட்களாக மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தமிழக கேரளா வனத்துறையினர் டி23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் உதவியுடன் புலியை தேடிவந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வனப்பகுதியில் வைக்கப்பட்ட 85 தானியங்கி கேமராவில் புலி தென்படாமல் இருந்தது.
இந்நிலையில் எட்டு நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை, கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தான் வாழ்ந்து வந்த போஸ்பரா வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து டி23 புலி இருக்கும் இடத்தை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவக்குழு, வனத்துறையினர் விரைந்தனர்.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !