Tamilnadu
ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 76 மாவட்ட கவுன்சிலர் - 161 ஒன்றிய கவுன்சிலர்: திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது,
அதேபோல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் இதுவரை 76 இடங்களில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. அதேபோல்1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 161 இடங்களில் முன்னிலையிலிருந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி: 5 மாவட்ட கவுன்சிலர், 15 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க முன்னிலையில் உள்ளது. வேலூரிலும் 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது.
செங்கல்பட்டில் 5 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 27 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் தி.மு.க முன்னிலையிலிருந்து வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதுவரை வந்த முடிவுகளின் படி மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கு இதுவரை ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடத்திலும் 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!