Tamilnadu
“மின்சாரம் தாக்கிய மகனும் காப்பாற்ற சென்ற தந்தையும் பரிதாப பலி”: அரியலூரில் நடந்த சோகம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் காட்டுப்பகுதியில் வீடுகட்டி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை கடையில் வேலை செய்துவந்த, இவரது மகன் சங்கர் வேலை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் வீட்டிலிருந்த முருங்கை மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வீட்டிற்கு வந்த சங்கர் மின் கம்மியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பின்னர், சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துசாமி மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மகனைக் காப்பாற்றச் சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தந்தை, மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!