Tamilnadu
“ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தங்கக்காசு - செல்போன் பரிசு”: தடுப்பூசி முகாமில் அசத்தல்!
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் தடுப்பூசி போடுகின்ற அனைவருக்கும் திண்டுக்கல் நகரில் உள்ள பிரபல துணிக்கடை ரூ.100 ரூபாய்க்கான கூப்பனும், அதேபோல் தனியார் நிறுவனமும் ரூ.100க்கான கூப்பன் வழங்குகின்றனர்.
மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் தவணை தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில், முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு மூன்று நபர்களுக்கும், இரண்டாவது பரிசாக அழகிய செல்போன் 5 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை ஐந்து நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ.2000 மதிப்புள்ள பேக் 15 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசி போட்டு செல்கின்றன. மேலும் இத்தகைய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!