Tamilnadu
“ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தங்கக்காசு - செல்போன் பரிசு”: தடுப்பூசி முகாமில் அசத்தல்!
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் தடுப்பூசி போடுகின்ற அனைவருக்கும் திண்டுக்கல் நகரில் உள்ள பிரபல துணிக்கடை ரூ.100 ரூபாய்க்கான கூப்பனும், அதேபோல் தனியார் நிறுவனமும் ரூ.100க்கான கூப்பன் வழங்குகின்றனர்.
மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் தவணை தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில், முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு மூன்று நபர்களுக்கும், இரண்டாவது பரிசாக அழகிய செல்போன் 5 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை ஐந்து நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ.2000 மதிப்புள்ள பேக் 15 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசி போட்டு செல்கின்றன. மேலும் இத்தகைய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!