Tamilnadu
பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவையில் வழக்குப் பதிவு : நடந்தது என்ன?
ஃபார்முலா கார் பந்தயம் மூலம் எல்லோருக்கும் பரிச்சயமானவர் நரேன் கார்த்திகேயன். கோவையைச் சேர்ந்த இவர் மீது பிரித்வி ராஜ்குமார் என்பவர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
பிரித்வி ராஜ்குமாரின் புகாரில், கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது நிலத்திற்குச் செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் மறித்துத் தடுப்பு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் போலிஸார் நரேன் கார்த்தியேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் பிரித்வி ராஜ்குமார் மீது புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ராஜ்குமார் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிலப்பிரச்சனை தொடர்பான இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”