Tamilnadu
பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவையில் வழக்குப் பதிவு : நடந்தது என்ன?
ஃபார்முலா கார் பந்தயம் மூலம் எல்லோருக்கும் பரிச்சயமானவர் நரேன் கார்த்திகேயன். கோவையைச் சேர்ந்த இவர் மீது பிரித்வி ராஜ்குமார் என்பவர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
பிரித்வி ராஜ்குமாரின் புகாரில், கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது நிலத்திற்குச் செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் மறித்துத் தடுப்பு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் போலிஸார் நரேன் கார்த்தியேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் பிரித்வி ராஜ்குமார் மீது புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ராஜ்குமார் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிலப்பிரச்சனை தொடர்பான இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!