Tamilnadu
“தனியாக இருந்த கைம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி” : போலிஸ் வலை வீச்சு!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரதெருவைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் லியோ ஜோசப், கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.
கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வரும் ரம்யாவை அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயக மூர்த்தி அவரது வீட்டுக்குச் சென்று தினந்தோறும் தனது இச்சைக்கு இணங்குமாறு பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.
இதுகுறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த விதவை பெண் ரம்யா, அ.தி.மு.க மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி மீது நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில், பெண்ணை அவமானப்படுத்துதல், பெண்களின் அங்கங்களை வர்ணித்து கொச்சை வார்த்தைகள் கூறி உல்லாசத்திற்கு அழைத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நாகை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க மீனவர் அணி இணைச் செயலாளர் விநாயகமூர்த்தி தலைமறைவானதால் போலிஸார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!