Tamilnadu
சிக்கிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் - கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கே.சி.வீரமணிக்குச் சொந்தமான ஏலகிரி மலையில் உள்ள பங்களா மற்றும் அவருடைய மனைவிக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து கே.சி.வீரமணிக்கு நெருக்கமான திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் நாட்றம்பள்ளி, முன்னாள் கவுன்சிலர் மலகொண்ட ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கும் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை சின்னகோடியூரில் உள்ள கே.சி.வீரமணி குடும்பத்தைச் சேர்ந்த பிடி மண்டியில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்த நிலையில் தற்போது கே.சி.வீரமணி சோதனை வளையத்தில் சிக்கியுள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!