Tamilnadu
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய கும்பல்.. 1 வருடத்திற்குப் பிறகு வெளியான வீடியோ: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை 4 வாலிபர்கள் சேர்ந்து நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து போலிஸார் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இந்த சம்பவம் யாத்கிரி நகர் பகுதியில் நடந்துள்ளது. மேலும் அந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு வேலையை முடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது தான் இந்த பெண்ணை நான்கு வாலிபர்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
வீடியோவில் இருந்த நான்கு பேரையும் அடையாளம் கண்டன போலிஸார், பீமராயா, லிங்கராஜூ, ஷாரானு, ஐயப்பா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. இதனால் இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ திடீரென வைரலானதால் போலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!