Tamilnadu
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய கும்பல்.. 1 வருடத்திற்குப் பிறகு வெளியான வீடியோ: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை 4 வாலிபர்கள் சேர்ந்து நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து போலிஸார் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இந்த சம்பவம் யாத்கிரி நகர் பகுதியில் நடந்துள்ளது. மேலும் அந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு வேலையை முடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது தான் இந்த பெண்ணை நான்கு வாலிபர்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
வீடியோவில் இருந்த நான்கு பேரையும் அடையாளம் கண்டன போலிஸார், பீமராயா, லிங்கராஜூ, ஷாரானு, ஐயப்பா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. இதனால் இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ திடீரென வைரலானதால் போலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!