Tamilnadu
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஆதரவளித்த அ.தி.மு.க... ‘நீட்’ நிரந்தர விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம்!
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நிலையில் அவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தங்களது ஆட்சியில் நீட் நுழைவுத்தேர்வை அனுமதித்துவிட்டு நீட் தேர்வை எதிர்ப்பதாக அ.தி.மு.க கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் கருதி நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நீட் மசோதாவுக்கு அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையிலான தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!