Tamilnadu
உளவுப்பிரிவு போலிஸுக்கு மயக்க ஊசி போட்டு ரூ. 1 லட்சம் திருட்டு... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
சென்னையில் உளவுப்பிரிவு போலிஸாருக்கு மயக்க ஊசி போட்டு ரூ.1 லட்சம் பணம் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). உளவுப்பிரிவு போலிஸ் அதிகாரியான இவர், கடந்த 28ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலிஸ் உதவி ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், ‘என்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இறக்கிவிடுவதாக கூறி கடந்த 28ஆம் தேதி எனது பகுதியை சேர்ந்த அஜய் விக்கி என்ற 25 வயது வாலிபர் காரில் அழைத்துச் சென்றார். போகும் வழியில் ‘நான் அடையாறில் புதிதாக ஒரு கடை திறந்துள்ளேன். நீங்கள் பார்த்துவிட்டு செல்லுங்கள்’ என்று அழைத்தார்.
அதை நம்பி நானும் சென்றேன். வழியில் 2 பேர் காரின் பின் சீட்டில் ஏறினார்கள். அவர்கள் எனக்கு மயக்க ஊசி செலுத்தி என்னுடைய செல்போன் மற்றும் ‘கூகுள் பே’ மூலம் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்திருந்தார்.
உளவுப்பிரிவு போலிஸையே கடத்தி பணம் பறித்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சூளைமேடு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் ரவியை அழைத்து சென்ற கார் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்நது, ஓசூரில் பதுங்கி இருந்த லோகேஷ் தனிப்படை போலிஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, முக்கிய குற்றவாளியான அஜய் விக்கி ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலிஸாஆர் ஆந்திரா சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் லோகேஷும் கைது செய்யப்பட்டார்.
அஜய் விக்கியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போலிஸ்காரர் ரவியும், அவரும் உடன்பிறவாத சகோதரர்கள் போல் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தை சாதகமாக வைத்து அவரை ஏமாற்றி அழைத்து சென்று பணம் பறித்தது தெரியவந்தது.
மேலும், புகாரளித்த தலைமைக் காவலர் ரவி குறித்து கைதான இளைஞர்கள் ஆதாரங்களுடன் சில தகவல்களைக் கூறியிருப்பதாகவும், இதுதொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!