Tamilnadu
”பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்றால் இதுதான் கதி” - சட்டத்திருத்தம் பற்றி அறிவித்த முதல்வர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, "தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க அரசு முன்வருமா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையாகத் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!