Tamilnadu
அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி.. மதுரை அருகே பரபரப்பு!
மதுரையில் புதுநத்தம் சாலையில் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் சாலையில் மதுரை சொக்கிகுளம் முதல் செட்டிகுளம் வரை 7 கி.மீ வரை மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் பறக்கும் பாலத்தில் நாகாணாகுளம் அருகே பாலத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
மதுரை - நத்தம் சாலையில் பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் ரூ.1,110 கோடியில் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய இப்பணி தொடர்ந்து காலதாமதமாக நடைபெற்றது. 40% பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் தற்போது இடிந்துள்ளது..
இந்தப் பகுதியில் பாலம் தேவையில்லை என கூறப்பட்ட நிலையில் தரமற்ற வகையில் கட்டப்பட்டு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!