Tamilnadu

அரசியலில் தமக்கென தனி முத்திரை.. தி.மு.க தலைவராக பொறுப்பேற்று 4ம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆகஸ்ட் 28 - இன்று மாபெரும் மக்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு தமது இறுதிக் காலம் வரை ஏறத்தாழ 50 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைமையை ஏற்று பல சோதனைகளை சந்தித்து சாதனை புரிந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஏறத்தாழ 45 ஆண்டுகாலம் அரசியல் பயிற்சி பெற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் 28 அன்று தி.மு.கழகத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

மிகப்பெரிய ஆளுமை கொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்குப் பிறகு தி.மு.கழகத்தை கடந்த 3 ஆண்டுகளாக கடுகளவு சேதாரமும் இல்லாமல் கட்டுக்கோப்பாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் தமக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார்.

மத்தியில் நடைபெற்று வரும் வகுப்புவாத பா.ஜ.க அரசை எதிர்த்தும், மாநிலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியையும் அகற்றி, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ளார். தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக இருந்த அரசியல் பேராண்மையோடு நடந்துக்கொண்டது மட்டுமல்லாது, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வியூகம் வகுத்து தமிழ்நாட்டின் தனது கொடியை நிலைநாட்டியுள்ளார். இவரது கடுமையான உழைப்பிற்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானர் தமது தலைவர் மு.க.ஸ்டாலின்.

நீண்டகால அரசியல் பின்னணியுடன் கடந்த மூன்றாண்டு ஆண்டுகளில் சிறப்பான தலைமையை தி.மு.கழகத்திற்கு வழங்கி, நான்காம் ஆண்டில் காலடி வைக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வாழ்த்தி போற்று வருகின்றனர்.

Also Read: “இலங்கை தமிழ் அகதிகள் வாழ்வை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்” : 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!