Tamilnadu
“காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் இன்று இருக்காது” : முதலமைச்சரின் நெத்தியடி பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான அன்பழகன் குற்றம்சாட்டினார்.
அவருக்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை. அவ்வாறு காழ்ப்புணர்ச்சியோடு நாங்கள் நடந்து கொண்டிருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டு இருக்காது.
காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் கழக அரசுக்குக் கிடையாது. காழ்ப்புணர்ச்சியோடு செயல்படவில்லை என்று துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “ஜெயலலிதா பெயரை வைக்கவேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியோ இடமோ ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!