Tamilnadu
“ஓணம் கொண்டாடச் சென்றவர் திரும்பி வந்ததும் மரணம்” : வங்கி மேலாளர் தற்கொலையால் நாமக்கல்லில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சனா மோகன். இவர் நாமக்கல்லில் வங்கி கிளை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
அஞ்சனா மோகன் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நாமக்கல்லில் வேலை பார்த்து வந்த அஞ்சனா ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றுள்ளார்.
பின்னர், நாமக்கல் வந்த அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டியே இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வாடகை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலிஸார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அஞ்சனா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வேறு காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!