Tamilnadu
"பயம் இல்லை, ஆனால் சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டோம்" : கொடநாடு கொலை விவகாரத்தில் பதறும் ஜெயக்குமார்!
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலத்தால் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் அடிபடுவதால் வேண்டுமென்றே தங்கள் மீது பழிபோடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூறிவருகின்றனர்.
இதற்கிடையே கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், இந்த வழக்கு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது, யாரையும் அச்சுறுத்தவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், "கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அ.தி.மு.கவுக்கு இல்லை. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தைச் சட்டப்பேரவையில் விவாதிப்பதா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல்" எனத் தெரிவித்தார்.
அப்போது, செய்தியாளர்கள், முதலில் நீங்கள் தானே சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரத்தைப் பற்றிப் பேசி வெளிநடப்பு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஜெயகுமார், எங்கள் உரிமையை நாங்கள் சட்டமன்றத்தில்தானே பேச முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அப்படியெனில், சட்டமன்றத்தில் கொடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது தானே. பின்னர் ஏன் விவாதிக்காமல் எதிர்க்கிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொடநாடு விவகாரத்தின் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!