Tamilnadu
குடிபோதையில் தகராறு.. நண்பரே வெட்டிக்கொலை செய்த கும்பல் - காஞ்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!
காஞ்சிபுரம் தாலுக்கா விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். குடி, கஞ்சா போதைக்கு அடிமையானவர் அடிதடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துள்ளார்.
விப்பேடு மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பிரேம்குமார் நேற்று இரவு நண்பர்களுடன் மது குடிக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி கை கலப்பு ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் குடிபோதையில் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் பிரேம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலைசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுக்கா போலிஸார், இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், இரு தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டார் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!