Tamilnadu
"அ.தி.மு.க ஆட்சியில் சட்டத்திற்குப் புறம்பான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு” : விரைவில் அதிரடி நடவடிக்கை!
சட்டத்திற்குப் புறம்பான திட்டங்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்டுமான மற்றும் அமைப்பு சாராத் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். எனவே, இணைய வழியில் பதிவு முறை எளிமையாக்கப்பட உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் உள்ள நிதியை வேறு அமைப்பிற்கு மாற்றக் கூடாது என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சட்டத்திற்குப் புறம்பான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சட்டத்திற்குப் புறம்பான செயல்.
இதனை ஆய்வு செய்வதற்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழில் சங்கங்களுக்குக் கட்டாயப் பதிவு முறை கொண்டுவரப்பட உள்ளது. இதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்துத் தொழிலாளர்களையும் வாரியத்தின் கீழ் கொண்டு வரமுடியும்.
2011ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிற்சங்கத்தில் 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது செயலில் இருக்கும் உறுப்பினர்கள் 13 லட்சம் என்று கூறுகின்றனர். இதற்காகவும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட உள்ளது.
தொழிலாளர்கள் வாரியத்தை எளிமை ஆக்குவதற்கு தேவையான ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதத்தில் எந்த ஒரு கோரிக்கை மனுவும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!
-
“நன்றாக சாப்பிடுங்கள்… படியுங்கள்… விளையாடுங்கள்… வாழ்க்கை நன்றாக இருக்கும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!