Tamilnadu
“இனி மீண்டும் பெண்களை கல்லால் அடிப்பார்கள்” : ஆப்கனின் முதல் பெண் விமானி வேதனை!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர். பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது.
இந்நிலையில், ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இஸ்லாம் விதிமுறைகளின்படி, அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்குவோம் என்று கூறிவருகின்றனர்.
தாலிபான்களால் பாதிக்கப்பட்டு, பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து பல்வேறு பெண் செயற்பாட்டாளர்கள் தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது என ஆப்கானிஸ்தான் விமானப் படையின் முதல் பெண் விமானி நிலோஃபர் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிலோஃபர் ரஹ்மானி ஃபாக்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இனி வரும் காலங்களில், காபூல் மைதானத்தில் மீண்டும் பெண்கள் மீது அவர்கள் கல்லைக் கொண்டு அடிப்பார்கள். துரதிருஷ்டவசமாக எனது குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டுள்ளது. அவர்கள் ஆபத்தில் உள்ளனர்.
எனது கனவுக்குத் துணையாக நின்றதற்காக அவர்கள் தாக்கப்படலாம். ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு 2013ஆம் ஆண்டு முதலே தலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். நிலோஃபர் ரஹ்மானியின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!