Tamilnadu
சொத்துக்காக இப்படியா... குடும்பமாகச் சேர்ந்து முதியவரை அடித்துக் கொடுமை: தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ராமானுஜம் பகுதியைச் சேர்ந்தவர் ராமய்யா. முதியவரான இவரது மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து ராமய்யா தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை மகன் மற்றும் பேரன், மருமகள் ஆகியோர் வற்புறுத்தி வாங்கிக் கொண்டனர். மேலும் இவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை எழுதிக்கொடுக்குமாறு குடும்பமாகச் சேர்ந்து ராமய்யாவை அடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள்.
குடும்பத்தினரின் இந்த கொடுமையைத் தாங்க முடியாமல் மனமுடைந்த முதியவர் ராமய்யா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் மகன், பேரன், மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
முதியவரை குடும்பமாகச் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!