Tamilnadu
"பா.ஜ.கவுக்கு தாவினாலும் தப்ப முடியாது; ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை உறுதி" : அமைச்சர் நாசர்
அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஆளுநரிடமும் தி.மு.க அரசு புகார் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணைக்குப் பயந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், "அ.தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த அனைவரின் மீதும் ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை தொடரும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.கவுக்கு தாவினாலும், சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க அரசு பின்வாங்குவதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கண்ணிருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனாகவும் இருக்கிறார் எல்.முருகன் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!