Tamilnadu
''இரண்டு கேன்களில் பெட்ரோல்...'' : திருமண விழாவில் நடிகர் மயில்சாமி செய்த அதிர்ச்சி சம்பவம்!
தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது: “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என அவர் கூறினார்.
Also Read
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !
-
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !
-
"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !