Tamilnadu
“பா.ஜ.கவை எதிர்த்தால் தொழில் செய்ய விடமாட்டோம்” : பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த அண்ணாமலை இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையிலேயே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக முன்னதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று உன்ணாவிரதத்தின்போது பேசிய அண்ணாமலை, “மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம்.” என மிரட்டல் விடுத்தார்.
கர்நாடக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகச் சொல்லிவிட்டு, பா.ஜ.கவை எதிர்த்தால் அவர்களின் தொழிலில் கை வைப்போம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!