Tamilnadu
“பா.ஜ.கவை எதிர்த்தால் தொழில் செய்ய விடமாட்டோம்” : பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த அண்ணாமலை இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையிலேயே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக முன்னதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று உன்ணாவிரதத்தின்போது பேசிய அண்ணாமலை, “மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம்.” என மிரட்டல் விடுத்தார்.
கர்நாடக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகச் சொல்லிவிட்டு, பா.ஜ.கவை எதிர்த்தால் அவர்களின் தொழிலில் கை வைப்போம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !