Tamilnadu
ஒரே கோயிலை குறிவைத்து ‘சனிக்கிழமைகளில் மட்டும்’ திருடும் நூதன கொள்ளையன்... போலிஸ் வலைவீச்சு!
சென்னை பெருங்களத்தூர் அருகே ஒரே கோயிலைக் குறிவைத்து தொடர்ந்து திருடி வரும் கொள்ளையனை போலிஸார் தேடி வருகின்றனர்.
சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள பீர்க்கன்கரணை பகுதியில் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் உண்டியலில் 4 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அடிக்கடி கோயில் உண்டியலில் பணம் காணாமல் போவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலிஸில் புகார் அளித்ததுடன், கோயிலில் சி.சி.டி.வி கேமராவையும் பொருத்தியுள்ளனர். ஆனாலும் மீண்டும் பணம் திருட்டு போயுள்ளது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருடன் ஒருவன் சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்து, தாமிரக் கம்பியில் சூயிங் கம் வைத்து உண்டியலில் விட்டு பணத்தைத் திருடுவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பொதுமக்கள் மறைந்திருந்து திருடனைப் பிடிக்க முயன்ற நிலையில் அவன் தப்பியோடியுள்ளான். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிஸார் சனிக்கிழமை திருடனை தேடி வருகின்றனர்.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!