Tamilnadu
23.25 கி.மீ தூரத்தை 2.36 மணி நேரத்தில் கடந்து 6 வயது சிறுவன் சாதனை.. திருவொற்றியூர் தி.மு.க MLA பாராட்டு!
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரது 6 வயது மகன் காமேஸ்வரன். இவர் சிறுவயது முதல் ஓட்டப்பந்தயம் பயிற்சி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், யுனிவர்சல் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இன்று காலை 23.25 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 36 நிமிடம் மாரத்தான் ஓடி இதுவரை யாரும் தொடாத சாதனையை நிகழ்த்தி சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
எண்ணூர் கே.வி.குப்பத்தில் மாரத்தான் ஓட்டத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கே.வி.குப்பத்தில் இருந்து எண்ணூர் நெடுஞ்சாலை சூரியநாராயண சாலை வழியாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் வரை சென்று மீண்டும் கே.வி.குப்பத்தை வந்தடைந்தார்.
மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த சிறுவன் காமேஸ்வரனுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் எம்.எல்.ஏ சிறப்பான வரவேற்பு அளித்து, பணமாலை சூட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழை கே.பி.சங்கர் வழங்கினார். சிறுவனின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!