Tamilnadu
23.25 கி.மீ தூரத்தை 2.36 மணி நேரத்தில் கடந்து 6 வயது சிறுவன் சாதனை.. திருவொற்றியூர் தி.மு.க MLA பாராட்டு!
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரது 6 வயது மகன் காமேஸ்வரன். இவர் சிறுவயது முதல் ஓட்டப்பந்தயம் பயிற்சி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், யுனிவர்சல் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இன்று காலை 23.25 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 36 நிமிடம் மாரத்தான் ஓடி இதுவரை யாரும் தொடாத சாதனையை நிகழ்த்தி சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
எண்ணூர் கே.வி.குப்பத்தில் மாரத்தான் ஓட்டத்தை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கே.வி.குப்பத்தில் இருந்து எண்ணூர் நெடுஞ்சாலை சூரியநாராயண சாலை வழியாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் வரை சென்று மீண்டும் கே.வி.குப்பத்தை வந்தடைந்தார்.
மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த சிறுவன் காமேஸ்வரனுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் எம்.எல்.ஏ சிறப்பான வரவேற்பு அளித்து, பணமாலை சூட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழை கே.பி.சங்கர் வழங்கினார். சிறுவனின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !