Tamilnadu
"ராஜேந்திர பாலாஜியால் ஆவின் பாலகத்திற்கு ரூ. 4.20 கோடி நஷ்டம்" : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையின்போது ஒரு டன் அளவுக்கு ஆவின் இனிப்புகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் அண்மையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முறைகேடான நடவடிக்கையால் திண்டுக்கல் ஆவின் பாலகத்திற்கு 4.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சங்கர், " திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு வழித்தடங்களில் ஏழு முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியின் போது ஏழு வழித்தடங்களுக்கும் ஒரே முகவர் நியமிக்கப்பட்டார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பாலகத்திற்கு 4.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!