Tamilnadu
"ராஜேந்திர பாலாஜியால் ஆவின் பாலகத்திற்கு ரூ. 4.20 கோடி நஷ்டம்" : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையின்போது ஒரு டன் அளவுக்கு ஆவின் இனிப்புகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் அண்மையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முறைகேடான நடவடிக்கையால் திண்டுக்கல் ஆவின் பாலகத்திற்கு 4.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சங்கர், " திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு வழித்தடங்களில் ஏழு முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியின் போது ஏழு வழித்தடங்களுக்கும் ஒரே முகவர் நியமிக்கப்பட்டார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பாலகத்திற்கு 4.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!