Tamilnadu
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பாமக நிர்வாகிகள்!
10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிட்டதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், வெங்கடேசன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, “10.5% இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த சட்டத்தை முதலமைச்சர் நிறைவேற்றி இருப்பது பாராட்டகுரியது” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பொறியியல் மாணவர் சேர்க்கையில் 10.5% குறித்து எந்த அறிவிப்பும் வராததால், நேற்று பா.மக.விற்கு நெருக்கடியான நாளாக கருதப்பட்டதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.
10.5% இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
கடந்த ஆட்சியில் 10.5% இட ஒதுக்கீடு சட்டம் சட்டபேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது, ஆனால் அதில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!