Tamilnadu
“வரைவு ஒளிப்பதிவு மசோதாவிற்கு என்ன அவசியம்?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதி மாறன் !
மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம்வருமாறு :
• வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவினை தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளனவா? எனில் அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தவும்,.
• ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழை பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலனை செய்யும் விதி முறைகள் உள்ளனவா? எனில் அதன் விவரம் மற்றும் நீக்கம் குறித்து தெரியப்படுத்தவும்.
• இந்த சட்ட மசோதாவை திருத்தம் செய்வதற்கு இத்துறைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டனவா? - எனில் அதன் விவரம் குறித்தும் இத்துறைச் சார்ந்தவர்களின் பதில்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும்.
• திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு கலைத்து விட்டனவா? - எனில் அதற்கான காரணம் மற்றும் விவரம் குறித்து தெரியப்படுத்தவும்.
• கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிரமத்தினால் பாதிக்கப்பட்ட திரைத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு செய்த உதவிகள் மற்றும் வகுத்த திட்டங்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.
Also Read
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !