Tamilnadu
“வரைவு ஒளிப்பதிவு மசோதாவிற்கு என்ன அவசியம்?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதி மாறன் !
மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம்வருமாறு :
• வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவினை தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளனவா? எனில் அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தவும்,.
• ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழை பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலனை செய்யும் விதி முறைகள் உள்ளனவா? எனில் அதன் விவரம் மற்றும் நீக்கம் குறித்து தெரியப்படுத்தவும்.
• இந்த சட்ட மசோதாவை திருத்தம் செய்வதற்கு இத்துறைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டனவா? - எனில் அதன் விவரம் குறித்தும் இத்துறைச் சார்ந்தவர்களின் பதில்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும்.
• திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு கலைத்து விட்டனவா? - எனில் அதற்கான காரணம் மற்றும் விவரம் குறித்து தெரியப்படுத்தவும்.
• கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிரமத்தினால் பாதிக்கப்பட்ட திரைத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு செய்த உதவிகள் மற்றும் வகுத்த திட்டங்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.
Also Read
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?