Tamilnadu
“வரைவு ஒளிப்பதிவு மசோதாவிற்கு என்ன அவசியம்?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த தயாநிதி மாறன் !
மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம்வருமாறு :
• வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவினை தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளனவா? எனில் அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தவும்,.
• ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழை பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலனை செய்யும் விதி முறைகள் உள்ளனவா? எனில் அதன் விவரம் மற்றும் நீக்கம் குறித்து தெரியப்படுத்தவும்.
• இந்த சட்ட மசோதாவை திருத்தம் செய்வதற்கு இத்துறைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டனவா? - எனில் அதன் விவரம் குறித்தும் இத்துறைச் சார்ந்தவர்களின் பதில்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும்.
• திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு கலைத்து விட்டனவா? - எனில் அதற்கான காரணம் மற்றும் விவரம் குறித்து தெரியப்படுத்தவும்.
• கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிரமத்தினால் பாதிக்கப்பட்ட திரைத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு செய்த உதவிகள் மற்றும் வகுத்த திட்டங்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.
Also Read
-
முதலமைச்சர் விஜய்க்கு “நாவடக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி தாக்கு!
-
இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
நேரத்திற்கு வருவது தவெக அகராதியில் இல்லை போல : கனிமொழி MP தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மகளிர் அணி கண்டனம்!
-
“முதலமைச்சர் விஜய் ஒரு கோயபல்ஸ்” - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
-
“இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே; அந்த நினைவுக்கு நன்றி!” : 2009-ல் வெளியான முத்தமிழறிஞர் கலைஞரின் மடல்!