Tamilnadu
நாள் முழுவதும் தொடர் சோதனை; கணக்கில் வராத ₹25 லட்சம் ரொக்கம் பறிமுதல் - கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரிலும் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் பெயரிலும் தனது பணி காலத்தில் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகம் முழுவதும் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!