Tamilnadu
கடனுக்கு சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடைக்காரை அடித்தே கொன்ற இளைஞர்கள்... மதுரையில் கொடூரம்!
மதுரை மாவட்டம், சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் வினோத். அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் வினோத்தின் கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் வினோத்திடம் கடனாக சிகரெட் கேட்டுள்ளனர். ஏற்கனவே இந்த இளைஞர்கள் கடையில் கடன் வைத்துள்ளதால், வினோத் கடனாக சிகரெட் தர முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் வினோத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தடுப்பதிற்குள் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பலத்த காயமடைந்திருந்த வினோத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தி வினோத்தை தாக்கிய மூன்று இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!