Tamilnadu
மக்களே உஷார்.. ‘ஹலோ, பேங்க் மேனேஜர் பேசுறேன்’ : வங்கிக்கு வரவழைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. எடுத்து பேசியப் போது, இந்தியன் வங்கி மேலாளர் என்று பேசி என அறிமுகம் செய்துகொண்டு, 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் ,100 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
உடனடியாக வினோத், தனது கடை ஊழியர் பாபுவிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியின் உள்ளே நுழைந்த பாபுவை ஒரு அடையாளம் தெரியாத நபர் வழிமறித்து, ரூபாய் நோட்டு மாற்ற வந்தவரா என கேட்டு அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு, உள்ளே செல்வது போல் போக்கு காட்டி விட்டு தலைமறைவாகியுள்ளார்.
சிறிது நேரம் காத்திருந்துவிட்டு வங்கி மேலாளர் அறைக்குச் சென்று விசாரித்தபோது தான், பாபு ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனடியாக கடை உரிமையாளர் வினோத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்று சம்பவங்கள் நடப்பதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !