Tamilnadu
”நீட் விலக்குக்காக 13 கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் செல்கிறோம்” - டெல்லி செல்லும் முன் அமைச்சர் பேட்டி!
அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நாளை மதியம் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளார். இதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது
”ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தேவையான சுகாதார துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க உள்ளோம்.
தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக துறையின் அமைச்சரிடம் எடுத்துக் கூறவுள்ளோம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டும் என்றும் கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க உள்ளோம்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்க உள்ளோம்.
தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செங்கல்பட்டு மற்றும் குண்னூரில் உள்ள தடுப்பூசி மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று வேண்டுகோளை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வைக்க உள்ளோம்.
நீட் தேர்வு தொடர்பாக 13 கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் செல்கிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவசியத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம்.
நீட் தேர்வுக்கான ஏ.கே.ராஜன் அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.”
எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!