Tamilnadu

சென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை; போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சென்னை ஆதம்பாக்கம், மோகனபுரி 4,வது தெருவை சேர்ந்தவர்கள் ரவிசந்திரன் வெங்கம்மாள் இவர்களுக்கு 16-வயதில் ஒரு மகனும், 6ஆம் வகுப்பு படிக்கும் (11-வயதில்) சிறுமி ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர். ரவிச்சந்திரன் ஆந்திராவில் விவசாயம் செய்து வருகிறார். வெங்கம்மாள் இரண்டு பிள்ளைகளுடன் தனியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5:00-மணி அளவில் வெங்கம்மாள் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டும் இருந்துள்ளனர். வீட்டில் ஒரே அறை இருப்பதால் ஜெயந்தி துணி மாற்ற போவதாக கூறி அண்ணனை வெளியே அனுப்பியுள்ளார்.

ஜெயந்தி வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அண்ணன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெயந்தி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பூப்படைந்தாகவும் இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகம் இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Also Read: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மனைவியின் சடலம்.. மாயமான கணவன்: கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!