Tamilnadu
கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா: இ-பாஸ் கட்டாயம் - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீலகிரி ஆட்சியர்!
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் தமிழக - கேரளா எல்லை மூடப்பட்டு மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் எல்லையிலுள்ள எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல், பிதர்காடு, அம்பலமூலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர் பணிக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் நீலகிரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!