Tamilnadu
கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா: இ-பாஸ் கட்டாயம் - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீலகிரி ஆட்சியர்!
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் தமிழக - கேரளா எல்லை மூடப்பட்டு மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் எல்லையிலுள்ள எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல், பிதர்காடு, அம்பலமூலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர் பணிக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் நீலகிரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!