Tamilnadu
கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா: இ-பாஸ் கட்டாயம் - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீலகிரி ஆட்சியர்!
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் தமிழக - கேரளா எல்லை மூடப்பட்டு மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் எல்லையிலுள்ள எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல், பிதர்காடு, அம்பலமூலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர் பணிக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் நீலகிரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!