Tamilnadu
"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்" : அமைச்சர் சேகர்பாபு உறுதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு," நெல்லையப்பர் கோயிலில் சிதலமடைந்து இருக்கும் மண்டபத்தைச் சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. அதேபோல், கருமாரி தெப்பம் முழுமையாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும், நெல்லையப்பர் கோவில் நவக்கிரக சந்திரன் சிலை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் உள்ள வெள்ளித் தேர் புனரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் யானை காந்திமதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்றுவந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். தமிழ்நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொன்மைவாய்ந்த கோவில்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்