Tamilnadu
"மகனை அமைச்சராக்கவே ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிய அரசு என கூறுவதை விமர்சிக்கிறார்": டி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!
மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சிப்பதாக தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.ஸ் இளங்கோவன்,"மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து வருகிறார். ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல். அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என கூறுவதில் தவறில்லை.
ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்வது பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மகனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
பெட்ரோலுக்கு விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு நூறு ரூபாய் விலை குறைப்பு என்ற தி.மு.க தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை.
தி.மு.க அரசை பொறுத்தவரைத் தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். தி.மு.க அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில்தான் பா.ஜ.க நீட் தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு முழு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே தி.மு.க அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!