Tamilnadu
சென்னை ஐ.ஐ.டியில் எரிந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்பு... சிக்கிய 11 பக்க தற்கொலை கடிதம்!
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலிஸார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் எரிந்த நிலையிலிருந்த உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்திருக்கிறார். இவர் வேளச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து போலிஸார், உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, 11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவருடன் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ விஞ்ஞானி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்போது தற்காலிக ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஐ.ஐ.டி மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!