Tamilnadu
500 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் e-bike தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் - அமைச்சர் தகவல்!
உலகத்திலேயே இரண்டாம் மிக பெரிய எலக்ட்ரிக் மேட்டார் வாகன தொழிற்சாலை கிருஷ்ணகிரியில் வரும் டிசம்பர் மாதம் வாகன உற்பத்தி தொடங்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு முதலமைச்சரை நேற்று தலைமை செயலகத்தில் OLA electric Mobility நிறுவனத்தினர் சந்தித்த நிலையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம் இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.
ஆண்டுக்கு 1 கோடி மின் வாகனங்கள் உற்பத்தியாவதுடன், அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். திண்டிவனம், செய்யாறில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
கடலூரில் ஹெச்.பி.எல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது என்றார். பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் வரும் நாட்களில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் வர உள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.
Also Read
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!