Tamilnadu
“நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பதே தி.மு.க அரசின் நிலைபாடு என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தி.மு.க அரசின் நிலைபாடு. நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்த தீர்மானத்தை ஜனாதிபதியோ அல்லது உச்சநீதிமன்றமோ யாராலும் நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெற அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை நடத்து வருகிறது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தைய சிகிச்சை மையத்தை முதலமைச்சர் விரைவில் திறந்துவைப்பார். அதேபோல், கருப்பு பூஞ்சைக்காக தமிழ்நாடு முழுவதும் ஏழு ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.
மூன்றாவது அலை வராமல் தடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக ஒன்றிய அரசு உயர்த்தி தர இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!