Tamilnadu
“நிபுணத்துவம், அறிவு அடிப்படையிலான ஒரு ‘மாதிரி அரசு’ தமிழ்நாட்டில் செயல்படுகிறது” : ரூபாலி ஸ்ரீவஸ்தவா !
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான ஒரு மாதிரி அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழநாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுதான் நாடு முழுவதும் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
சமூக வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா நேற்று (23.6.2021) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “உடன்பாடு இல்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதை மகாராஸ்டிரா செயல்படுத்திக் காட்டிய பிறகு..
பா.ஜ.க.வின் பணம் +ஆள்பலம் + பிரச்சாரம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை வங்காளம் செயல் படுத்திக் காட்டிய பிறகு.. நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான மாதிரி ஆட்சி முறையை தமிழ்நாடு செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!