Tamilnadu
“நிபுணத்துவம், அறிவு அடிப்படையிலான ஒரு ‘மாதிரி அரசு’ தமிழ்நாட்டில் செயல்படுகிறது” : ரூபாலி ஸ்ரீவஸ்தவா !
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான ஒரு மாதிரி அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழநாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுதான் நாடு முழுவதும் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
சமூக வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா நேற்று (23.6.2021) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “உடன்பாடு இல்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதை மகாராஸ்டிரா செயல்படுத்திக் காட்டிய பிறகு..
பா.ஜ.க.வின் பணம் +ஆள்பலம் + பிரச்சாரம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை வங்காளம் செயல் படுத்திக் காட்டிய பிறகு.. நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான மாதிரி ஆட்சி முறையை தமிழ்நாடு செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!