Tamilnadu
“கொரோனா மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி வந்தாலும் தி.மு.க அரசு எதிர்க்கொள்ளும்” : அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
கலைஞரின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அடுத்து குன்றத்தூர் அருகே உள்ள பரணிபுத்தூரில் தி.மு.க சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என ஆயிரத்திற்கும மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
கொரோனாவின் மூன்றாவது அலை வந்தாலும், எந்த நெருக்கடியான நிலை வந்தாலும் தி.மு.க அரசு அதனை எதிர்கொள்ள தயாரக உள்ளது. கடந்த ஆட்சியில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை.
ஆனால் தற்போது தி.மு.க அரசு அனைத்து வசதிகளும் செய்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் வீட்டிலேயே எளிய முறையில் ஆவி பிடிக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான அரசு” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!