Tamilnadu
பயிற்சியின்போது 19 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : தடகள பயிற்சியாளரை கைது செய்து போலிஸார் தீவிர விசாரனை!
சென்னை அடையாரு அருகே செயல்பட்டு வரும் விளையாட்டு அகாடமியில், தடகள பயிற்சியாளராக நாகராஜன் ஈடுபட்டு வந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்று வரும் நிலையில், பயிற்சியாளர் நாகராஜன் எங்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் மாணவிகள் சிலர் புகார் அளித்திருந்தனர்.
இதுதொடர்பாக மாணவிகள் அளித்த புகாரில், பயிற்சியாளர் நாகராஜன் எங்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இரவு நேரங்களில் தங்களது செல்போன் வாட்ஸ் அப் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாகராஜனிடம் பயிற்சி பெற்றுவந்த 19 வயது மாணவி ஒருவர், பயிற்சியின்போது பாலியல் தொல்லைக்கொடுத்தாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிதாக பாதிக்கப்பட்ட பெண் பூக்கடை அனைத்து மகளிர் மகளிர் காவல் ஆய்வாளரிடம் நேரடியாக புகார் வழங்கினார்.
இதனையடுத்து மாணவி அளித்தபுகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவருந்தனர். இந்நிலையில், நேற்று நாகராஜன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மீண்டும் போலிஸார் அவரைக் கைது செய்தனர்.
மேலும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் மற்றும் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை பயிற்சியாளர் நாகராஜன் மீது 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், புகாரின் படி தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலிஸார் தெரிவித்தனர்.
Also Read
-
“பழனிசாமி, RSS சாமிகள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!