Tamilnadu
“பெட்ரோல் டீசல் விலை மூலம் வசூல் வேட்டை” : தேர்தல் முடிந்ததும் சுயரூபத்தை காட்டிய மோடி அரசு!
பெட்ரோல் விலையைக் கேட்டாலே வயிறு எரிகிறது. 90 ரூபாயாக ஆகிவிட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், விரைவில் ரூ.100 ஆகப் போகிறது. டீசல் விலை 84 ரூபாயை நெருங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தனிப்பட்ட அந்தப் பொருள்களோடு நிற்பது இல்லை. அத்தோடுசேர்ந்து அனைத்தும் விலை கூடுவதற்கு இவை அடிப்படையாக அமையும்.
இந்நிலையில், கொரோனா நெருப்பே அணையாத நிலையில் மேலும் மேலும் விலையேற்றி மக்களை மோடி அரசு வதைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதால் பெட்ரோல் விலை அதிகரிக்காமல் இருந்தது.
ஆனால், தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று சென்னையில் 93 ரூபாய் 84 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை இன்று 94 ரூபாய் 13 காசுகள் என 29 காசுகள் உயர்ந்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பெட்ரோல் மீதான வரியை மத்தியரசு குறைக்க வேண்டும் என்றும் புதிதாக பொறுப் பேற்றிருக்கும் மாநில அரசு வரியை குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!