Tamilnadu
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 22 அமைச்சர்கள் நியமனம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது, சிகிச்சையளிப்பது, கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:
1. சென்னை மாவட்டம்
மா. சுப்பிரமணியன்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு,
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
2. செங்கல்பட்டு மாவட்டம்
தா.மோ. அன்பரசன்,
ஊரகத் தொழில் துறை அமைச்சர்
3. கோயம்புத்தூர் மாவட்டம்
அர. சக்கரபாணி,
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா. ராமச்சந்திரன்,
வனத் துறை அமைச்சர்.
4. திருவள்ளூர் மாவட்டம்
சா.மு. நாசர்,
பால்வளத் துறை அமைச்சர்
5. மதுரை மாவட்டம்
பி. மூர்த்தி,
வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
6. தூத்துக்குடி மாவட்டம்
கீதா ஜீவன்,
சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,
மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
7. சேலம் மாவட்டம்
வி. செந்தில்பாலாஜி,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
8. திருச்சி மாவட்டம்
கே.என். நேரு,
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
9. திருநெல்வேலி மாவட்டம்
இ. பெரியசாமி,
கூட்டுறவுத் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு,
தொழில் துறை அமைச்சர்
10. ஈரோடு மாவட்டம்
சு. முத்துசாமி,
வீட்டு வசதித் துறை அமைச்சர்.
11. காஞ்சிபுரம் மாவட்டம்
எ.வ. வேலு,
பொதுப்பணித் துறை அமைச்சர்
12. திருப்பூர் மாவட்டம்
மு.பெ. சாமிநாதன்,
செய்தித் துறை அமைச்சர்
13. வேலூர் மாவட்டம்
துரைமுருகன்,
நீர்வளத் துறை அமைச்சர்.
ஆர். காந்தி,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
14. விழுப்புரம் மாவட்டம்
க. பொன்முடி,
உயர் கல்வித் துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான்,
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!