Tamilnadu
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னணியில் தி.மு.க: 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி முன்னிலை! #DMK4TN
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கானன வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பொன்முடி, பா.ஜ.க வேட்பாளர் கலிவரதனை விட 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் 33 ஆயிரத்து 333 வாக்குகள் பெற்று முன்னிலையில் பெற்றுள்ளார். விழுப்புரம் தி.மு.க வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் 781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் பெரம்பலூர் (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ம.பிரபாகரன் 6547 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார். செங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி, அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணுவைவிட 4761 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசபாக்கம், வந்தவாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !