Tamilnadu
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னணியில் தி.மு.க: 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி முன்னிலை! #DMK4TN
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கானன வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பொன்முடி, பா.ஜ.க வேட்பாளர் கலிவரதனை விட 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் 33 ஆயிரத்து 333 வாக்குகள் பெற்று முன்னிலையில் பெற்றுள்ளார். விழுப்புரம் தி.மு.க வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் 781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் பெரம்பலூர் (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ம.பிரபாகரன் 6547 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார். செங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி, அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணுவைவிட 4761 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசபாக்கம், வந்தவாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Also Read
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”