Tamilnadu
“வொய்ட் வாஷ்” - சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை முழுமையாக கைப்பற்றும் தி.மு.க!
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 163 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க 70 இடங்களில் முன்னிலையில் வருகிறது. இதனடிப்படையில் பார்த்தால் தி.மு.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் தலைநகர் சென்னையையும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்று முழுமையாக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
தாம்பரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா 10,028 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் 15,575 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அதேபோல், திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 87,853 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். காஞ்சிபுரம் தொகுதியில் சி.வி.எம்.பி.எழிலரசன் 8,660 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!