Tamilnadu
“பா.ஜ.கவுக்கு சேவகம் செய்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்டிய தமிழக மக்கள்” : தோல்வியை தழுவிய அ.தி.மு.க !
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 165 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் 9 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மூர்த்தியிடம் படுதோல்வியடைந்தார். ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசரிடம் தோல்வியடைந்தார்.
அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3,468 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தங்க பாண்டியனிடம் தோல்வியடைந்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க வேட்பாளர் ஆர்லட்சுமணனிடம் 15,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்ல்மண்டி நடராஜன், தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 18,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!