Tamilnadu
“பா.ஜ.கவுக்கு சேவகம் செய்த அமைச்சர்களுக்கு பாடம் புகட்டிய தமிழக மக்கள்” : தோல்வியை தழுவிய அ.தி.மு.க !
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 165 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் 9 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமார் 27் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மூர்த்தியிடம் படுதோல்வியடைந்தார். ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசரிடம் தோல்வியடைந்தார்.
அதேபோல், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3,468 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தங்க பாண்டியனிடம் தோல்வியடைந்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க வேட்பாளர் ஆர்லட்சுமணனிடம் 15,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்ல்மண்டி நடராஜன், தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 18,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
Also Read
-
“மிசா - சிறையில் நான் பட்ட கொடுமைகள்” : #VibeWithMKS - நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் சாதனை படைக்கும் தமிழ்நாடு” : அமைச்சர் TRB ராஜா பெருமிதம்!
-
பறவைக் காய்ச்சல் : “பாதி வேக வைத்த இறைச்சியை தவிருங்கள்...” - அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!
-
பிப்.12 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க ஆதரவு! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
“படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!