Tamilnadu

15 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் தமிழகத்தில் 80 பேர் பலி! #CovidUpdates

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 14,842 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,22,671 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,15,25,113 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 4,086 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,05,570 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,163 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1004 பேருக்கும், திருவள்ளூரில் 793 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 9,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,52,186 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,00,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 80 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,475 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “தியேட்டர்கள், மால்கள் இயங்காது” - புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு : முழு விவரம்..!