Tamilnadu
உணவுப் பற்றாக்குறை? ஊட்டியில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டு யானை - கண்டுகொள்ளாத வனத்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது வாழைத்தோட்ட கிராமம். இந்த கிராமத்தில் ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை ஒன்று அண்மைக்காலமாக அந்த கிராமத்தில் முகாமிட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களாக மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாத ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை, தற்போது மாலை நான்கு மணிக்கெல்லாம் வாழைத்தோட்டம் பேருந்து நிலையம் மற்றும் கிராமத்தில் உள்ள தெருவுக்குள் நடந்து செல்கிறது.
அத்துடன் வீட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருட்களை தேடும் இந்த யானை, வாழைத்தோட்ட கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் உடலுக்குள் சென்று காட்டு யானை உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு கிராமப்பகுதியில் உலாவரும் இந்த யானையை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!