Tamilnadu
பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அ.தி.மு.க-பா.ஜ.க?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமல்லாது கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆளும் அ.தி.மு.க - பா.ஜ.க முறைகேடுகளில் ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் அதிக கால இடைவெளி இருப்பதன் மூலம் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய அ.தி.மு.க - பா.ஜ.க முயற்சி செய்யும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்தவித பாதுகாப்புமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த வித போலிஸ் பாதுகாப்பும் ஒன்றி, இருவர் இருசக்க வாகனத்தில் சுமார் 10 கி.மீ தூரம் கொண்டு சென்றுள்ளனர்.
இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப போது, தாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலத்தில் பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர். எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக கிளம்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!
-
குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
-
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா? : வைகோ ஆவேசம்!
-
’பன்முகக் கலைஞர்’ : 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து பாடம்!
-
"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" - முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !